×

இது வேற வாய்…அது வேற வாய் பாஜக சொல்வதை தான் நாங்கள் கேட்போம்: சி.வி.சண்முகம் எம்பி பேட்டி

விழுப்புரம்: எங்கள் கூட்டணியில் இருப்பதால் பாஜக சொல்வதை தான் கேட்போம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார். அதிமுக, பாஜ இடையே கடும் மோதல்போக்கு நிலவி வந்தது. மாநில தலைவர் அண்ணாமலைக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக பேசி வந்தார். கட்சி நிர்வாகிகளும் பாஜவுக்கு எதிராக பேட்டி அளித்து வந்தனர். இந்நிலையில், டெல்லியில் சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்தனர். அதன்பிறகு அண்ணாமலையுடன் மோதல் எதுவும் இல்லை என்று எடப்பாடி கூறினார்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் எம்பி நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாஜக சொல்வதை தான் அதிமுக கேட்டு வருவதாக கூறுகின்றனர். ஆம் எங்கள் கூட்டணியில் இருக்கும் வரை அவர்கள் சொல்வதை தான் கேட்போம். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து கூட்டணியை மீண்டும் உறுதிப்படுத்திவிட்டு வந்துள்ளார் என்றார். சி.வி.சண்முகம் இதற்கு முன்பு பேட்டியளித்தபோது, ‘பாஜவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோற்றது’ என்று கூறினார். இப்போது பாஜக சொல்வதைத்தான் கேட்போம் என்று அவர் கூறியிருப்பது பற்றி அக்கட்சியினரே ‘இது வேற வாய்… அது வேற வாய்’ என்று கலாய்க்கின்றனர்.

The post இது வேற வாய்… அது வேற வாய் பாஜக சொல்வதை தான் நாங்கள் கேட்போம்: சி.வி.சண்முகம் எம்பி பேட்டி appeared first on Dinakaran.

Tags : bajaka ,Chanmukam ,Viluppuram ,minister ,C. CV ,Sangmukam ,C. ,Sammukam ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...