×

6 மாதங்களுக்கு முன் திருமணமானவர் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

வடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரசேகரன் (31). மயிலாடுதுறையில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. குறிஞ்சிப்பாடி பெருமாத்தூரான் வீதியில் வீரசேகரன் மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவரது மனைவி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். 10 நாட்களுக்கு முன்பு மனைவி அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் பணிமுடிந்து திரும்பிய வீரசேகரன் படுத்து தூங்கினார். நேற்று காலை 7 மணி அளவில் அவரது பெற்றோர் வந்து பார்த்தபோது மின்விசிறியில் தூக்குப்போட்ட நிலையில் வீரசேகரன் பிணமாக தொங்குவதைப் பார்த்து கதறினர். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து, அவரது தற்கொலைக்கு காரணம் குடும்ப பிரச்னையா, பணிச்சுமையா என விசாரிக்கின்றனர்.

The post 6 மாதங்களுக்கு முன் திருமணமானவர் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Armed Force Guard ,Veerasekaran ,Useruvai ,Tadakkudi, Cuddalore district ,mayiladuthu ,Dinakaran ,
× RELATED விழுப்புரத்தில் பரபரப்பு: எஸ்பிக்கு...