×

சிரியாவில் துருக்கி படை தாக்குதலில் ஐஎஸ் தலைவர் பலி

அங்காரா: சிரியாவில் உள்நாட்டு போர் நடக்கும் நிலையில் அந்நாட்டின் எல்லையில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு மற்றும் குர்திஷ் படைகளை எதிர்த்து துருக்கி படைகள் சண்டையிட்டு வருகின்றன. இந்நிலையில், துருக்கி அதிபர் எர்டோகன் செய்தி சேனலுக்கு நேற்று அளித்த பேட்டியில், சிரியாவில் துருக்கி படையின் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவன் அபு ஹுசேன் அல் குரேஷி கொல்லப்பட்டதாக தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதலில் குரேஷி கொல்லப்பட்டதாகவும், அவரை துருக்கியின் உளவு அமைப்பான எம்ஐடி நீண்ட காலமாக ரகசியமாக கண்காணித்து வந்ததாகவும் எர்டோகன் கூறி உள்ளார். ஆனால் ஐஎஸ் அமைப்பு இத்தகவலை உறுதிப்படுத்தவில்லை.

The post சிரியாவில் துருக்கி படை தாக்குதலில் ஐஎஸ் தலைவர் பலி appeared first on Dinakaran.

Tags : IS ,Turkey ,Syria ,Ankara ,Dinakaran ,
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி