×

குடும்ப தகராறில் விவசாயியை வெட்டி கொன்ற மனைவி

வருசநாடு: தேனி மாவட்டம், வருசநாடு, உப்புத்துறை மாளிகைப்பாறை மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா (40). இவரது மனைவி ஜெயா (35). இவர்களின் மகள், மகன் ஆகியோர் மதுரையில் உள்ள விடுதியில் தங்கி படிக்கின்றனர். தம்பதி இடையே நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஜெயா அரிவாளை எடுத்து கணவரின் தலையில் வெட்டியுள்ளார். பின்னர் அவரே கணவரை அரசு மருத்துவமனைக்கு ஆட்டோவில் ஏற்றி சென்றுள்ளார். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். இதையடுத்து ஜெயாவை போலீசார் கைது செய்தனர்.

The post குடும்ப தகராறில் விவசாயியை வெட்டி கொன்ற மனைவி appeared first on Dinakaran.

Tags : Varasanadu ,Raja ,Theni District, Varasanadu, Uttar Mansion ,
× RELATED வருசநாடு அருகே புதிய தடுப்பணை பயன்பாட்டுக்கு வந்தது