×

வீடுகளில் மது பதுக்கி விற்ற 4 பேர் கைது

 

பாப்பிரெட்டிப்பட்டி, மே 1: பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், பொம்மிடி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது வடசந்தையூர் பகுதியை சேர்ந்த சந்திரா(80) என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பையர்நத்தம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் வீட்டில் 28 பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. அதே போல், முத்தம்பட்டியை சேர்ந்த சண்முகம்(75), பெருமாள்(60), சுகுணா(35) ஆகியோரது வீடுகளில் 97 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்தனர்.

The post வீடுகளில் மது பதுக்கி விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Papiretippatti ,Pommedi Police Station ,Papiripettippatti Thaluka ,Dinakaran ,
× RELATED பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி...