×

தா.பழூர் பகுதியில் கொட்டி தீர்த்த கோடை மழை

 

தா.பழூர், மே1: அரியலூர் மாவட்டம் தா.பழூர் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக கோடை மழை பெய்தது. தற்பொழுது தா.பழூர் சுற்றி உள்ள காரைக்குறிச்சி, இடங்கண்ணி, அருள்மொழி, குடிகாடு, தென்கச்சி பெருமாள் நத்தம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் குருவை பட்டம் நெல் நடவு பணி செய்து வருகின்றனர்.இந்நிலையில் கோடை வெயில் வெளுத்து வாங்கியதால் பயிர்களில் உள்ள தண்ணீர் அதிக சூடாக இருப்பதால் பயிர் பச்சை பிடித்து வளர்வதில் சிரமம் இருந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும் சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்தது. காலை முதல் வானம் மோகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் குளிர்ந்த காற்று வீசியது. இந்நிலையில் திடிரென மழை துவங்கியது. இந்த மழையானது சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்தது. இந்த கோடை மழையால் வெப்பம் தனிந்து குளிர்ந்த காற்று வீசியது இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கொட்டி தீர்த்த கோடை மழையால் குருவை பட்டம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இந்த மழை பயிர் வளர்ச்சிக்கு உதவும் என மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post தா.பழூர் பகுதியில் கொட்டி தீர்த்த கோடை மழை appeared first on Dinakaran.

Tags : Tha. Bhaur ,Tha.Phaur ,Ariyalur district ,Tha.Pazhur ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு நெல்வயல்களில் களர்...