×

கல்லூரியில் பட்டமளிப்பு விழா

 

போடி: போடி முந்தல் சாலையில் உள்ள ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் 39வது பட்டமளிப்பு விழா, கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. கல்லூரி செயலாளர் புருஷோத்தமன் முன்னிலை வகித்து பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பதிவாளர் சதாசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், ஏழை மாணவர்கள் பயன்பெரும் விதமாக இந்த ஏல விவசாயிகள் சங்க கல்லூரி இயங்கி வருகிறது.

விவசாயம் நம்நாட்டின் முதுகெலும்பாக இருப்பதால், மாணவர்கள் கல்வி கற்க பாடுபட்ட பெற்றோருக்கு நன்றியுடன் இருக்க வேண்டும். தங்கள் வாழ்க்கையை சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டும். கற்பித்தலை விட பயிற்சியே முக்கியமானது என்றார். இதில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 509 மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை துணைமுதல்வர் பாலமுருகன், கணிப்பொறி அறிவியல் துறைத்தலைவர் மாடசாமி செய்திருந்தனர். இதில், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், சிவப்பிரகாசம், கமலநாதன், சொரூபன், ராதாகிருஷ்ணன், நந்தகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post கல்லூரியில் பட்டமளிப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Bodi ,Ela Farmers Association College ,Bodi Munthal Road ,College ,Convocation Ceremony ,Dinakaran ,
× RELATED கள்ளத்துப்பாக்கி வைத்திருந்தவர் கைது