×

வாட்ஸ்அப்பில் பதிவிடுவதில் அடிதடி

 

போடி: போடி உள்ள ஜேகேபட்டியை சேர்ந்த பொன்னையா என்பவரது மகன் ரவிபாண்டி. தேவாரம் அருகே உள்ள பண்ணைப்புரம் வள்ளுவர் தெருவை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் கார்த்திக். சுகாதார ஆய்வாளர்.இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள். வாட்ஸ்அப் குருப்பில் கருத்துக்களை பதிவிடுவது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரையொருவர் கம்புகளால் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இது குறித்து இருவரும் தனித்தனியாக போடி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வாட்ஸ்அப்பில் பதிவிடுவதில் அடிதடி appeared first on Dinakaran.

Tags : Ravipandi ,Ponnaiah ,JKBatti ,Bodi ,Pannapuram ,Devaram… ,Adathadi ,Dinakaran ,
× RELATED தாழம்பூர் ஊராட்சியில் திடக்கழிவு...