×

வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்திற்கு 10 டன் முருங்கை வரத்து

 

காங்கயம்: வெள்ளகோவில், முத்தூர், காங்கயம், புதுப்பை பகுதிகளில் செடிமுருங்கை, மரமுருங்கை ஆகியவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. இவை வாராவாரம் அறுவடை செய்து விவசாயிகள் வெள்ளகோவிலில் இயங்கும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்கு ெகாண்டு வருகின்றனர். கடந்த வாரம் 20 டன் வரத்தான நிலையில் கிலோ ரூ.10க்கு விற்பனையானது. நேற்று 10 டன் வரத்தானது, மர முருங்கை ரூ.15க்கும்,செடி முருங்கை ரூ.20க்கும், கரும்பு முருங்கை ரூ.30க்கும் விலைபோனது. இதனை வியாபாரிகள் வாங்கி கோவை, சென்னை மார்க்கெட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

The post வெள்ளகோவில் கொள்முதல் நிலையத்திற்கு 10 டன் முருங்கை வரத்து appeared first on Dinakaran.

Tags : Vellakovil ,Kangayam ,Muttur ,Puduppai ,Cedimurangai ,Maramurugai ,Dinakaran ,
× RELATED மாணவி கூட்டு பலாத்காரம் அதிமுக நிர்வாகிக்கு குண்டாஸ்