×

மனைவியை டார்ச்சர் செய்த கணவர் மீது வழக்கு

 

கோவை: கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் செந்தமிழ் நகரை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண்ணிற்கு அவரது கணவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. பெண்ணின் கணவர் நடத்தையில் அடிக்கடி சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்று கணவர், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது அவர் மனைவியை தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் உடைத்தார். மேலும் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்து அவரது மனைவி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மனைவியை டார்ச்சர் செய்த கணவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Kuniyamuthur Sukunapuram Senthamil ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...