×

நவரசம் மகளிர் கல்லூரியில் 29ம் ஆண்டு விழா அமைச்சர் முத்துசாமி பரிசுகளை வழங்கினார்

 

மொடக்குறிச்சி: அரச்சலூர் நவரசம் மகளிர் கல்லூரியில் 29ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி செயலாளர் தி.செந்தில்குமார் வரவேற்றார். கல்லூரி தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். கல்லூரி பொருளாளர் பழனிசாமி தொடக்கவுரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் கனி எழில் ஆண்டறிக்கை வாசித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு கல்லூரி மாணவிகளுக்கும், துறை தலைவர்களுக்கும், பேராசிரியர்கள், மற்றும் அலுவலக பணியாளர்களுக்கும் பரிசுகளை வழங்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு எம்பி கணேசமூர்த்தி, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் முடிவில் கணினி அறிவியல் துறைத்தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

The post நவரசம் மகளிர் கல்லூரியில் 29ம் ஆண்டு விழா அமைச்சர் முத்துசாமி பரிசுகளை வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Muthusamy ,Navarasam Women's College ,Modakurichi ,Arachalur Navarasam Women's College ,T.Senthilkumar ,
× RELATED மோடியை திட்டி பேசினால் வீடு திரும்ப...