×

டெல்லி எய்ம்சில் இருந்து நேபாள அதிபர் டிஸ்சார்ஜ்

காத்மண்டு:  நேபாள அதிபர் ராமசந்திர பவுடல் சிகிச்சை முடிந்து நேற்று இரவு நேபாளம் திரும்பி சென்றார்.நேபாளத்தின் புதிய அதிபராக நேபாள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 78 வயதான ராமசந்திர பவுடல் கடந்த மார்ச் 13ம் தேதி பதவி ஏற்றார். கடும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட ராமசந்திர பவுடல், காத்மண்டுவின் மகராஜ்கஞ்ச் நகரில் உள்ள திரிபுவன் போதனா பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவர் டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது முற்றிலும் குணமடைந்துள்ள அவர் நேற்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொடர்ந்து விமானம் மூலம் நேற்று நேபாளம் புறப்பட்டு சென்றார். தனக்கு சிகிச்சை அளித்த இந்திய மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பவுடல் நன்றிகளை தெரிவித்து கொண்டுள்ளார்.

The post டெல்லி எய்ம்சில் இருந்து நேபாள அதிபர் டிஸ்சார்ஜ் appeared first on Dinakaran.

Tags : Aimsil, Delhi ,Kathmandu ,President ,Ramachandra Powdal ,Nepal ,Delhi Aims ,
× RELATED சிறார் இணைய குற்றங்களை தடுக்க சர்வதேச...