×

நேரடி நெல் கொள்முதல் நிலையம் முதல் அரசு பள்ளி வரை சாலை சீரமைப்பு பணி துவங்கியது: பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு

முத்துப்பேட்டை: தினகரன் செய்தி எதிரொலியாக முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் மில்லடி நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையம் முதல் அரசு பள்ளி வரையிலான பல்லாங்குழி சாலை சீரமைக்கும் பணி துவங்கியது. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் மில்லடி நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையம் முதல் அரசு பள்ளி வரையிலான சுமார் ஒரு கிலோ மீட்டர் சாலையானது இப்பகுதி மக்களின் முக்கிய சாலையாகும். இந்த சாலை போட்டு சுமார் 12 வருடங்களுக்கு மேலாகிறது. இவ்வழியாக இப்பகுதி மக்கள் சுற்றுபகுதி கிராமங்களுக்கும் அதேபோல் தொலைதூரம் செல்ல கிழக்கு கடற்க்கரை சாலை மில்லடி பஸ் நிறுத்தத்திற்கு சென்று முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, ஆகிய பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்லவேண்டும்.

குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள், அதேபோன்று சுற்று பகுதியை சேர்ந்த மக்கள் தொலைதூரம் செல்ல இவ்வழியாகதான் வந்து கடைதெருவுக்கு வரவேண்டும். ஆயிரக்கணக்கான விவசாயிகளின் சாகுபடி வயலுக்கு இவ்வழியாக தான் செல்ல வேண்டும். குறிப்பாக சுற்று பகுதி கிராம விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்களை இந்த நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் தான் வந்து போடவேண்டும். நடுநிலைப்பள்ளிக்கு இந்த சாலை வழியாகத்தான் மாணவ, மாணவிகள் வந்து செல்கின்றனர். இப்படி முக்கியத்துவமும் அவசியமும் வாய்ந்த இந்த சாலை, தற்போது தார் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் மண் சாலையாக இருந்தது பல இடங்களில் சாலை இருப்பக்கமும் ஆக்கிரமிப்பால் சுருங்கி, சாலையை பயன்படுத்தும் அனைத்து மக்களும் மிகப்பெரிய சிரமத்துக்குள்ளாகி வந்தனர். மேலும் சாலையால் அடிக்கடி சிறு விபத்துக்களும் நடந்து வந்தன.

இந்நிலையில் சாலை குறித்து சுட்டிக்காட்டி கடந்த மார்ச் 24ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது சாலை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றி தெரிவித்தனர். இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த பெத்த பெருமாள் கூறுகையில், நீண்ட பல வருடங்கள் பிரச்னையை தினகரன் நாளிதழ் சரியான நேரத்தில் சுட்டிக்காட்டி வெளியிட்டதின் எதிரொலியாக, சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது. தினகரன் நாளிதழுக்கு நன்றி என்றார்.

The post நேரடி நெல் கொள்முதல் நிலையம் முதல் அரசு பள்ளி வரை சாலை சீரமைப்பு பணி துவங்கியது: பொதுமக்கள் நன்றி தெரிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Muthuppet ,Uppur Milladi ,Direct Government ,Paddy Purchase Station ,post Direct ,Thanksgiving ,
× RELATED வாக்கு சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களை விரட்டிய குடிமகனால் பரபரப்பு