×

பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பத்தில் மர்ம விலங்கு தாக்கி ஆடு பலி

பேரணாம்பட்டு: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராமய்யா மகன் சங்கரமூர்த்தி. ஓய்வுபெற்ற சர்க்கரை ஆலை ஊழியரான இவருக்கு சொந்தமான மா, தென்னந்தோப்பு உள்ளது. இத்தோப்பில் சங்கரமூர்த்தி 4 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் ஆட்டை கயிற்றால் கட்டி விட்டு குடியாத்தம் சென்று உள்ளார். தோப்பில் பணிபுரியும் ஓங்கு குப்பம் கிராமத்தை சேர்ந்த பெருமாள், இவரது மனைவி சசி ஆகியோர் தோப்பிற்கு வந்தபோது திடீரென்று சத்தம் கேட்டு அருகில் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு கட்டியிருந்த ஆட்டை சிறுத்தை ஒன்று மார்பு, வயிறு போன்ற பகுதிகளில் கடித்து கொண்டு இருந்ததாம். அதை கண்டு கூச்சலிட்டதும் ஆட்டை அங்கேயே விட்டு விட்டு காட்டுக்குள் ஓடிவிட்டதாம். உடனடியாக தோப்பின் உரிமையாளருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். பின்பு தகவலறிந்த பேரணாம்பட்டு வனவர் சரவணன், பல்லலகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து, வனத்துறையினர கூறுகையில், இந்த ஆட்டை மர்ம விலங்கு ஏதோ ஒன்று தான் தாக்கியுள்ளதாக தெரிகிறது என்று தெரிவித்தனர்.

The post பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பத்தில் மர்ம விலங்கு தாக்கி ஆடு பலி appeared first on Dinakaran.

Tags : palpalaalakubam ,BERANAMPATTU ,Ramaiya ,Sankaramoorthi ,Pallalakuppam ,Vellore district ,Pallalakudam ,Dinakaran ,
× RELATED அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு பைக் மோதி 2 பேர் படுகாயம்