×

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப்பணிகள்

 

தூத்துக்குடி:தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப்பணிகளை கனிமொழி எம்.பி. ஆய்வு செய்தார். இந்திய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் மூலமாக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இரவு நேரங்களில் விமானங்கள் வந்து சென்றிடும் வகையில் விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த புதிய வளர்ச்சி திட்டத்தின்கீழ் புதியதாக ஓடுபாதை அமைத்தல், புதிய முனையக் கட்டடம், தொழில்நுட்ப பிரிவு, கட்டுப்பாட்டு கோபுரம், தீயணைப்பு நிலையம் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த விரிவாக்கப்பணிகளை கனிமொழி எம்.பி., நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் விமான நிலைய அதிகாரிகளிடம் பணிகள் நடைபெறும் விதம், அது எப்போது முடிக்கப்படும் என்பவை குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது, தூத்துக்குடி விமான நிலைய இயக்குனர் சிவபிரசாத், விமான நிலைய மேலாளர் ஜெயராமன், உதவி மேலாளர் பிரிட்டோ, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்பெரியசாமி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கப்பணிகள் appeared first on Dinakaran.

Tags : Tuticorin Airport ,Thoothukudi ,Kanimozhi MP ,Thoothukudi Airport ,Civil Aviation Authority of India ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...