×

திருப்புத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

திருப்புத்தூர், ஏப். 30: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே கல்வெட்டு மேட்டுப் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மனைவி கற்பகவள்ளி (29). இவர் கடந்த ஏப்.27ம் தேதி கண்டரமாணிக்கத்தில் நடந்த திருவிழாவிற்காக வீட்டை பூட்டிவிட்டு தனது உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். பின்னர் நேற்று வீட்டுக்கு வந்து பார்க்கும் பொழுது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த மூன்று பவுன் மதிப்பிலான மூன்று மோதிரம், ஒரு ஜோடி தோடு நகையை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து கற்பகவள்ளி திருக்கோஷ்டியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து திருக்கோஷ்டியூர் காவல் நிலைய எஸ்.ஐ.,விஜய் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

The post திருப்புத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Tiruptur ,Anandan ,Kalpagavalli ,Tiruptur, Sivagangai district ,Dinakaran ,
× RELATED கோவை மை வி3 ஆட்ஸ் நிறுவன அதிபர்கள் உள்ளிட்ட 3 பேர் மீது புதிய வழக்கு