×

ஆட்சி அதிகாரம் வழங்குவதில் தமிழக மக்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம்: எச்.டி.தேவகவுடா பேச்சு

மைசூரு: தமிழக மக்களிடம் இருந்து, ஆட்சி அதிகாரம் வழங்குவதில் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம் என மஜத தலைவர் எச்.டி.தேவகவுடா, செய்தியாளர்களிடம் வெளிப்படையாக பேசினார்.
மைசூரு மாவட்டம், பிரியாபட்டினம் தாலுகா, கேஆர் நகரில், மஜத தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவகவுடா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. தமிழக மக்களிடம் இருந்து, ஆட்சி அதிகாரம் வழங்குவதில் நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். அங்கு காங்கிரசோ, பாஜவோ ஆட்சி செய்யவில்லை. பிராந்திய கட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர். அதேபோல், மாநில வளர்ச்சிக்கு இங்கு மஜதவுக்கு கர்நாடக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

பஞ்சரத்னா யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினரும் பயனடைவார்கள். 25 இடங்களில் மஜத வெற்றி பெறாது என மைசூரை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசி வருகிறார். கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, ​​அன்னபாக்யா, க்ஷீர பாக்யா வழங்கியதாக கூறுபவர்களுக்கு, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய எங்கிருந்து பணம் கிடைக்கும். எச்.டி.குமாரசாமி முதல்வராக பதவியேற்ற போதும், நாங்கள் யாருடைய வீட்டு வாசலுக்கும் செல்லவில்லை. எங்கள் வீட்டு வாசலில் வந்து ஆதரவளித்தவர்கள் காங்கிரஸ்காரர்கள். அவர்கள் விடாமுயற்சியுடன் அரசாங்கத்தை அமைத்து, பின்னர் அவர்களே கலைத்து விட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆட்சி அதிகாரம் வழங்குவதில் தமிழக மக்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம்: எச்.டி.தேவகவுடா பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,H. ,TD ,Devagavuda ,Mysore ,TD Devagavuda ,
× RELATED தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு வீடாக...