×

காரில் ஏறிய போது மயங்கி விழுந்த சித்தராமையா

விஜயநகர்: கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக வந்த கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, காரில் ஏறிய போது மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது பாதுகாவலர்கள் தாங்கி பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடாகாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. முக்கிய கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சியின் வேட்பாளர்களுக்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைவர்கள் சோர்வையும் பொருட்படுத்தாமல் ஒரு களத்தில் மும்முரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக விஜயநகருக்கு, ஹெலிகாப்டரில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சென்றார். ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி காரில் ஏறிய போது தொண்டர்களை பார்த்து கை அசைத்தார். அப்போது திடீரென்று மயக்கம் ஏற்பட்டு, கீழே சாய்ந்தார். உடனடியாக அவரது மெய்ப்பாதுகாவலர்கள் கைகளைப் பிடித்து தூக்கினர். இதையடுத்து சித்தராமையாவின் உதவியாளர் தண்ணீர் கொடுத்தார். தண்ணீர் அருந்திய பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிய சித்தராமையா, பின்னர் மேடை நிகழ்ச்சிக்கு சென்றார்.

The post காரில் ஏறிய போது மயங்கி விழுந்த சித்தராமையா appeared first on Dinakaran.

Tags : Siddaramaiah ,Vijayanagar ,Karnataka ,Chief Minister ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் தண்டவாளத்தில் லாரி சிக்கியதால் ரயில் சேவை பாதிப்பு