
- குஜராத்
- குஜராத் காவல்துறை நடவடிக்கை
- தென்காசி
- தென்காசி
- லங்கான்ஷி
- வேந்தர்
- நவீன் பட்டேல்
- தர்மிதா பட்டேல்
- குற்றக் காவல்துறை நடவடிக்கை
தென்காசி: தென்காசி அடுத்த இலஞ்சி முதலாளி குடியிருப்பை சேர்ந்த மர அறுவை மில் அதிபர் நவீன் படேல், தர்மிஸ்தா படேல் தம்பதியின் மகள் கிருத்திகா. இவரும், இலஞ்சி கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் வினித்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், கடந்த ஜனவரி 25ம் தேதி கிருத்திகாவின் பெற்றோர், உறவினர்கள் கிருத்திகாவை கடத்திச் சென்றனர். இதுகுறித்து வினித் புகாரின்படி குற்றாலம் போலீசார் கிருத்திகாவின் தந்தை நவீன் மற்றும் உறவினர்கள் உள்பட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் 3 பேர்கைது செய்யப்பட்டனர். இதனிடையே கிருத்திகாவிற்கு ஏற்கனவே உறவினர் மைத்ரிக்குடன் திருமணம் நடைபெற்றதாக கிருத்திகா பேசுவது போன்று வீடியோ வெளியானது. இதையடுத்து கிருத்திகா மற்றும் வினித் ஆகியோர் வீடியோ மற்றும் ஆடியோ வெளியிட்டு தங்களது நிலைப்பாட்டை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் கிருத்திகாவின் தந்தை கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கிருத்திகாவை நீதிமன்றத்தில் அவரது குடும்பத்தினர் ஆஜர்படுத்தினர். கோர்ட் உத்தரவுப்படி கிருத்திகாவை காப்பகத்தில் தங்க வைத்து வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் அவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த சூழலில் விசாரணைக்கு கிருத்திகா ஆஜராகவில்லை. இதனால் கிருத்திகாவின் தந்தை நவீன் படேலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து குற்றாலம் போலீசார், குஜராத்தில் தங்கி இருந்த நவீன் படேலை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரை விமானத்தில் திருவனந்தபுரம் அழைத்து வந்தனர். பின்னர் நேற்று மதியம் குற்றாலம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கிருத்திகாவும் உடன் வந்திருந்தார்.
The post காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் வழக்கு தந்தை குஜராத்தில் கைது: குற்றாலம் போலீசார் அதிரடி appeared first on Dinakaran.