×

கொடைக்கானலில் குளு குளு சீசனை ரசிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்; போட்டோ, செல்பி எடுத்து உற்சாகம்: தங்கும் விடுதிகள் ஹவுஸ் புல்

கொடைக்கானல்: பள்ளி கோடை விடுமுறை மற்றும் தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். பூங்காக்களில் செல்பி எடுத்தும், போட்டோ எடுத்தும் உற்சாகமடைந்தனர். சுற்றுலாப் பயணிகள் குவிவதால், நகரில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழகின்றன.  திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தற்போது கோடை சீசன் களைகட்ட துவங்கியுள்ளது. பள்ளிகளில் கோடை விடுமுறை மற்றும் அடுத்து 2 நாட்கள் வார விடுமுறை, மே 1ம் தேதி தொழிலாளர் தினம் என தொடர் விடுமுறையையொட்டி நேற்றே சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் கொடைக்கானலில் குவிய துவங்கி விட்டனர்.

இதனால், கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகள் அனைத்தும் ஹவுஸ் புல்லாகி விட்டது. பிரையண்ட், ரோஜா பூங்காக்களை போல் நேற்று குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகிலுள்ள செட்டியார் பூங்காவிலும் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகம் காணப்பட்டது. இங்கு பூத்து குலுங்கும் சிவப்பு சால்வ்யா மலர்கள், பிளாக்ஸ் போகன் வில்லா மர மலர்கள் மற்றும் மலர்களால் அமைக்கப்பட்ட மயில், செஸ் போர்டு உள்ளிட்டவற்றை சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் ஏரியில் படகு சவாரி மற்றும் ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் ரைடிங் செய்தும் மகிழ்ந்தனர்.

The post கொடைக்கானலில் குளு குளு சீசனை ரசிக்க குவிந்த சுற்றுலாப் பயணிகள்; போட்டோ, செல்பி எடுத்து உற்சாகம்: தங்கும் விடுதிகள் ஹவுஸ் புல் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Hostels House Grass ,
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்