×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணிநேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 59,071 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 27,651 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ரூ.4.12 கோடி காணிக்கை செலுத்தினர். சனிக்கிழமையான இன்று காலை 7 மணி நிலவரப்படி திருமலையில் உள்ள 2 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

ஏழுமலையான் கோயிலில் வார விடுமுறை நாட்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்நிலையில் பள்ளிகளில் இன்று முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 மணிநேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tirupati Ezumalayan Temple ,Tirumalai ,Tirupati Ethumalayan Temple ,Tirupati Edemalayan ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...