×

9 பவுலர்களை பயன்படுத்திய லக்னோ!

பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் லக்னோ அணி 257 ரன்களை குவித்தும், பஞ்சாப்புக்கு எதிராக 9 பவுலர்களை பயன்படுத்தினார்கள். வெற்றி உறுதி என எனத் தெரிந்தும் நிலையான 6 பந்துவீச்சாளர்களை மட்டும் பயன்படுத்தாமல் 9 பவுலர்களை பயன்படுத்தி, தங்களது அணியின் பந்துவீச்சு வலிமையை வெளிகாட்டினார்கள். அதாவது கேப்டன் கே.எல்.ராகுல், விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரனை தவிர்த்து மற்ற அனைவரும் பந்துவீசினர். இப்படியாக இந்த சீசனில் முதல் 7 போட்டிகளில் மொத்தம் 24 பவுலர்களை அந்த அணி பயன்படுத்தியுள்ளது. இது உண்மையில் மெகா சாதனைதான். இனிவரும் போட்டிகளிலும் இதேபோல் லக்னோ அணி ஒரு போட்டியில் 9 பவுலர்கள் வரை பயன்படுத்துவார்கள் என தெரிகிறது. அப்படி செய்யும்போது, பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச்சு குறித்த குழப்பம் இருந்துகொண்டே இருக்கும். எனவே இது சிறந்த திட்டமாகவே கருதப்படுகிறது.

The post 9 பவுலர்களை பயன்படுத்திய லக்னோ! appeared first on Dinakaran.

Tags : Lucknow ,Punjab ,Dinakaran ,
× RELATED உத்திரபிரதேசத்தில் பேருந்து – லாரி மோதி விபத்து: 6 பேர் உயிரிழப்பு