×

கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கொடைக்கானல்: கொடைக்கானல் ஆர்டிஓ அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்டிஓ ராஜா தலைமை வகிக்க, தாசில்தார் முத்துராமன், வனத்துறை ஏசிஎப் சக்திவேல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு மேல்மலை பகுதியில் காட்டுப்பன்றி மற்றும் கீழ்மலை பகுதிகளில் காட்டு யானை, காட்டு மாடு உள்ளிட்ட வனவிலங்குகளால் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து மேல்மலை கவுஞ்சி பகுதியில் உள்ள அறம்பளை அணை உடைந்த போது பாதிக்கப்பட்ட விளை பயிர்களுக்கு நஷ்டஈடு வழங்க கோரியும், தனது நிலத்தை சீர்செய்து தர வேண்டும் எனவும் பலமுறை மனு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி, விவசாயி ஒருவர் கூட்டத்தில் புறக்கணித்து வெளியேறினார். பின்னர் ஆர்டிஓ, விவசாயிகளின் குறைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

The post கொடைக்கானலில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Kodaikanal RTO ,Tahsildar Muthuraman ,RTO Raja ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து...