×

ராயநல்லூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

 

திருத்துறைப்பூண்டி, ஏப். 29: தமிழக அரசு ஆணை படி பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அறிவித்தபடி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ராயநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி மற்றும் முதல் வகுப்பில் மாணவர் சேர்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் அறிவழகன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் சுஜாதா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை பாரதிமகாதேவி வரவேற்றார்.

முதல் வகுப்பில் சேர்ந்த 10 மாணவர்களுக்கு கிராம மக்கள் சார்பில் இலவசமாக சீருடை வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர் பிரேமா, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கேசவராஜன், ஊராட்சி மன்ற துணை தலைவர் அமுதா, ஊராட்சி செயலர் சரண்ராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஆசிரியை, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறித்து பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

The post ராயநல்லூர் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Student Enrollment Awareness Rally ,Rayanallur Government School ,Thirutharupundi ,Minister of School Education ,Government of Tamil Nadu ,Thiruthirapundi Union ,Student Admission Awareness Rally ,
× RELATED மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி