×

நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் ரூ.25 கோடியில் சிட்கோ தொழிற்பேட்டை

 

ஆலங்குடி, ஏப்.29: கொத்தக்கோட்டை பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படவுள்ள இடத்தினை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தக்கோட்டை பகுதியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை சுமார் 25 கோடி மதிப்பீட்டில் 55 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசின் மானிய கோரிக்கை அறிவிக்கப்பட்டது.

இந்த சிட்கோ தொழிற்பெட்டை மூலமாக அப்பகுதியில் உள்ள சுமார் 2000க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கப்படும் நிலையில் தொழிற்பேட்டை அமைய உள்ள இடத்தை தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி வட்டாட்சியர் விஸ்வநாதன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் ரூ.25 கோடியில் சிட்கோ தொழிற்பேட்டை appeared first on Dinakaran.

Tags : CITCO ,Alangudi ,Minister ,Meyyanathan ,industrial park ,Kothakottai ,Pudukottai district ,Dinakaran ,
× RELATED சென்னையில் சோடியம் ஹைட்ராக்ஸைடு...