×

போலி ஆவண மோசடியில் ஓபிஎஸ் ஆதரவாளரான ஊராட்சி தலைவர் கைது

தேனி: போடி அருகே பி.அணைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (30). இவருக்கு பூர்வீகமாக 2.50 ஏக்கர் நிலம் அதே கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்துக்கான பொது அதிகார பத்திரத்தை சென்னையை சேர்ந்த அந்தோனி டாமனிக் என்பவருக்கு, 1996ல் ஜெயப்பிரகாஷின் தாத்தா ஒச்சாத்தேவர் எழுதிக் கொடுத்துள்ளார். பின்னர் ஒச்சாத்தேவர், வாரிசுகளான பெருமாள், முருகன் இறந்தனர். இதையடுத்து, அந்தோனி டாமெனிக் பொது அதிகாரப்பத்திரம் மூலம் 2022, பிப். 15ம் தேதி பெரியகுளம் அருகே வடுகபட்டியை சேர்ந்த தங்கமாயன் என்பவருக்கு போலி ஆவணங்கள் தயார் செய்து, கிரையம் செய்து கொடுத்துள்ளார். இதற்கு பி.அணைக்கரைப்பட்டி ஊராட்சி தலைவரும், ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான லோகநாதன் உடந்தையாக இருந்துள்ளார். இதுபற்றி தொடரப்பட்ட வழக்கில் லோகநாதன் நேற்று கைதானார்.

The post போலி ஆவண மோசடியில் ஓபிஎஸ் ஆதரவாளரான ஊராட்சி தலைவர் கைது appeared first on Dinakaran.

Tags : OPS ,Honey ,Bodi ,Jayaprakash ,
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி