- சிவபத்மநாதன்
- திமுக
- ஆலங்குளம், கடையம், முக்கொடல்
- Alankulam
- தென்காசி தெற்கு மாவட்டம்
- சிவபத்மநாதன்
- ஆலங்குளம் மலைக்கோயில் வளைவு
- ஆலங்குளம், கடையம்
- முக்கூடல்
- தின மலர்
ஆலங்குளம்: தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆலங்குளம் மலைக்கோயில் ஆர்ச் அருகிலுள்ள ஏஜே மகாலில் இன்று காலை 10 மணியளவில் ஆலங்குளம் தெற்கு ஒன்றியம், ஆலங்குளம் பேரூர், கீழப்பாவூர் கிழக்கு ஒன்றியம், கீழப்பாவூர் பேரூர் ஆகிய நான்கு பகுதிகளுக்கு உட்பட்ட திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தொகுதி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் தலைமையில் நடைபெறுகிறது.
மாலை 4 மணி அளவில் முக்கூடல் பேரூர், பாப்பாக்குடி ஒன்றியம் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் முக்கூடல் பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. மாலை 5 மணியளவில் ஆழ்வார்குறிச்சி சேனைத்தலைவர் சுடலைமாடசாமி கோவில் மண்டபத்தில் கடையம் தெற்கு, வடக்கு ஒன்றியம், ஆழ்வார்குறிச்சி பேரூர் ஆகிய பகுதிகளுக்கான பூத் கமிட்டி, கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பூத் கமிட்டி உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
The post ஆலங்குளம், கடையம், முக்கூடலில் திமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சிவபத்மநாதன் அறிக்கை appeared first on Dinakaran.