×

பூந்தமல்லி தொகுதியில் ரூ.8 கோடியில் பள்ளி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேச்சு

திருவள்ளூர்: பூந்தமல்லி தொகுதியில் ரூ.8 கோடி மதிப்பில் பள்ளிக் கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தெரிவித்துள்ளார். பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருவள்ளூர் ஒன்றியம், தொழுவூர் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு திறப்பு விழா மற்றும் தொட்டிக்கலை ஊராட்சியில் ரூ.10 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

விழாவிற்கு ஒன்றிய திமுக செயலாளர் பிரேம் ஆனந்த், ஒன்றிய குழு துணைத் தலைவர் பர்கத்துல்லா கான், பொதுக்குழு உறுப்பினர் விமல் வர்ஷன், ஒன்றிய துணை செயலாளர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர் வேதவல்லி சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர்கள் தொழுவூர் திவ்யா சக்கரவத்தி, தொட்டிகலை சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். இந்த விழாவிற்கு ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தலைமை தாங்கி தொழுவூர் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து தொட்டிக்கலை ஊராட்சிக்குட்பட்ட மாரியம்மன் கோவில் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தும், முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கியும் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தொட்டிக்கலை ஊராட்சியில் இதுவரை ரூ.51 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை, சிமெண்ட் சாலை, பேவர் பிளாக் சாலை, மழை நீர் கால்வாய் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொட்டிக்கலை ஊராட்சி முழுவதும் 1.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க ரூ.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூந்தமல்லி, திருவள்ளூர், எல்லாபுரம் ஆகிய ஒன்றியங்களில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்ட தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

எம்எல்ஏ என்ற முறையில் பூந்தமல்லி தொகுதியில் உள்ள 40 நடுநிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் தொடங்க, தலா ரூ.2 லட்சம் வீதம் ரூ.80 லட்சம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார் இந்நிகழ்ச்சியில் ஒன்றிய நிர்வாகிகள் ஜெயராமன், ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் ஹரி, அயத்தூர் ராஜேஷ், தொழுவூர் சக்கரவத்தி, பாஸ்கரன், புவியரசு, வீரராகவன், அரவிந்த், ஜெயபால், சுனில், ஆதவன், மூர்த்தி பாக்கம் பார்த்திபன், சிறுகடல் சௌந்தராஜன், தொட்டிகலை ராஜா, ராஜ்குமார் திருவூர் வினோத்குமார், ரூபேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பூந்தமல்லி தொகுதியில் ரூ.8 கோடியில் பள்ளி கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ பேச்சு appeared first on Dinakaran.

Tags : Poontamalli ,A. Krishnaswamy ,MLA ,Tiruvallur ,Tamil Nadu government ,Poontamalli Constituency ,
× RELATED பூந்தமல்லியில் கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது