×

கல்வி உதவித்தொகை பெற ஆதிதிராவிடர் மாணவர்கள் வங்கி கணக்கு துவங்க வேண்டும்: கலெக்டர் ஆர்த்தி தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையினர் கல்வி உதவித்தொகை பெற ஆதாருடன் இணைப்புடன் கூடிய, அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி உதவியுடன், வங்கி கணக்கு துவங்க வேண்டும் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2022-2023ம் கல்வியாண்டில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக, ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு இல்லாத மாணவ, மாணவிகள் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியின் மூலம், பள்ளிகளிலேயே ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

தற்போது, பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஆதார் இணைப்புடன் கூடிய வங்கிக் கணக்கு இல்லாத மாணவ, மாணவிகள் அருகிலுள்ள அஞ்சலகம் மற்றும் தபால்காரருக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம், மாணாக்கர்களின் ஆதார் மற்றும் மொபைல் எண்ணை பயன்படுத்தி இ-கேஓய்சி (விரல் ரேகை) மூலம் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு துவக்கிக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கல்வி உதவித்தொகை பெற ஆதிதிராவிடர் மாணவர்கள் வங்கி கணக்கு துவங்க வேண்டும்: கலெக்டர் ஆர்த்தி தகவல் appeared first on Dinakaran.

Tags : Aditravidar ,Kanchipuram ,Kanchipuram, India ,Adar ,Adhravidar Welfare Department ,Collector Arthi ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் அண்ணா நினைவு பூங்கா சீரமைப்பு