சென்னை: கர்நாடகத்தில் தமிழ் மொழிக்கு அவமரியாதை செய்த பாஜகவின் அண்ணாமலையும், ஈஸ்வரப்பாவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை என்ற பெயரில் அண்ணாமலை அறியாமையை வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் மொழியின் வரலாறு அண்ணாமலை, ஈஸ்வரப்பாவுக்கு அறவே தெரியாது என்பதையே அந்த நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது என்று வைகோ சாடியுள்ளார்.
The post கர்நாடகத்தில் தமிழ் மொழிக்கு அவமரியாதை: அண்ணாமலை, ஈஸ்வரப்பா மன்னிப்பு கேட்க வைகோ வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.