×

சிறையில் உள்ள நடிகைக்கு பிறந்த நாள் ‘கேக்’ கொடுக்க அனுமதி: சுகேஷ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: சிறையில் உள்ள நடிகையும், மனைவியுமான லீனா பாலின் பிறந்த நாளுக்கு கேக் கொடுக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ரூ.200 கோடி பணமோசடி வழக்கில் கைதான சுகேஷ் சந்திரசேகர் டெல்லி மண்டோலி சிறையிலும், மோசடிகளுக்கு உடந்தையாக இருந்த அவரது நடிகையும் மனைவியுமான லீனா பால், மண்டோலி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் லீனா பாலுக்கு இன்று (ஏப். 28) பிறந்த நாள் என்பதால், அவருக்கு கேக் ஒன்று வாங்கி கொடுக்க அனுமதிக்க வேண்டும் என்று சுகேஷ் சந்திரசேகர் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி ஷைலேந்தர் மாலிக், ‘லீனா பாலின் பிறந்த நாளன்று சிறை பேக்கரியில் இருந்து கேக் வாங்கி கொடுக்க சுகேஷ் சந்திரசேகருக்கு அனுமதி அளித்தார். இதை சிறை அதிகாரி லீனாவிடம் 28ம் தேதி (இன்று) ஒப்படைக்க வேண்டும். கைதியொருவர் சிறையிலிருந்தாலும் தன் குடும்பத்தினருடன் உணர்வுப்பூர்வமாக இணைந்திருப்பதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தவே, இந்த அனுமதி வழங்கப்பட்டது. சட்ட அம்சங்களை விட மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று நீதிபதி தனது உத்தரவில் கூறினார்.

The post சிறையில் உள்ள நடிகைக்கு பிறந்த நாள் ‘கேக்’ கொடுக்க அனுமதி: சுகேஷ் வழக்கில் நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Sukesh ,New Delhi ,Delhi ,Lena Palin ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு