மொகாலி: ஐபிஎல் தொடரில் மொகாலியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 38வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மோதுகின்றன. பஞ்சாப் இதுவரை 7 போட்டியில் 4 வெற்றி, 3 தோல்வியுடன் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. தோள்பட்டை காயத்தால் கடந்த போட்டியில் ஆடாத கேப்டன் தவான் இன்று களம் இறங்குகிறார். கடைசி போட்டியில் மும்பையை வீழ்த்திய நிலையில் இன்று வெற்றிப்பாதையை தொடரும் முனைப்பில் உள்ளது.
மறுபுறம் லக்னோவும் 7 போட்டியில் 4ல் வெற்றி, 3ல் தோல்வி என 8 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. கடைசி போட்டியில் குஜராத்திற்கு எதிரான 136 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 128 ரன் மட்டுமே எடுத்து அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இதில் இருந்து மீண்டு வர இன்று போராடும். கேப்டன் கே.எல்.ராகுல் 262, கைல் மேயர்ஸ் 243 ரன் எடுத்து பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். இரு அணிகளும் ஏற்கனவே இந்த சீசனில் கடந்த 15ம் தேதி லக்னோவில் மோதிய போட்டியில் பஞ்சாப் 13 ரன் வித்தியாசத்தில் வென்றது. அதற்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியுடன் லக்னோ களம் காண்கிறது. கடந்த சீசனில் பஞ்சாப்பிற்கு எதிராக மோதிய ஒரு போட்டியில் லக்னோ வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
The post மொகாலியில் இன்றிரவு மோதல்: பஞ்சாப்பை பழிதீர்க்குமா லக்னோ? appeared first on Dinakaran.