×

அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னை மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம்

சென்னை: 2023-24 நிதியாண்டில் அறிவிக்கப்பட்ட சென்னை மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி இன்று (28.4.2023) சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் 2023-24 நிதியாண்டிற்கான அறிவிப்புகளில் சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளின் பணிகளை செயல்படுத்தும் விதமாக பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய்த் துறை, போக்குவரத்துத் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் கட்டிட வடிவமைப்பாளர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜே.எபிநேசர், சென்னைப் பெருநகர வளர்ச்சி‌க் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சு.அமிர்த ஜோதி, பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம். சிவகுரு பிரபாகரன், பெருநகர சென்னை மாநகராட்சி நகரமைப்புக் குழுத் தலைவர் இளைய அருணா, சென்னை மாநகரப் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் (பொ) இளங்கோவன், அரசு சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.தேரணிராஜன், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பாலாஜி, சி.எம்.டி.ஏ. தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னை மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sekarbabu ,Chennai ,Chief Minister ,BD G.K. Stalin ,Seagarabu ,
× RELATED சிறுவாபுரி முருகன் கோயிலில் அலைமோதிய...