×

தஞ்சாவூர் அடுத்த பூதலூரில் ஆனந்த காவேரி வாய்க்கால் தூர்வாரும் பணி

 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பூதலூரில் ஆனந்த காவேரி வாய்க்காலில் தூர்வாரும் பணியை நேற்று மாலை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழக அரசின் தலைமை கொறடா கோவி.செழியன், நீர்வளத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப்சக்சேனா, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், நீர் வளத் துறைத் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் ராமமூர்த்தி, எம்எல்ஏக்கள் துரை சந்திரசேகரன் (தஞ்சாவூர்), டி.கே.ஜி நீலமேகம் (தஞ்சாவூர்), அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுக்கும் பூபதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

The post தஞ்சாவூர் அடுத்த பூதலூரில் ஆனந்த காவேரி வாய்க்கால் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Tags : Ananda Kaveri Canal ,Boothalur ,Thanjavur ,Water Resources Minister ,Durai Murugan ,Boothalur, Thanjavur district ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் அரிசி...