×

மயிலாடுதுறையில் மெழுகுவர்த்தி ஏந்தி விஏஓக்கள் ஆர்ப்பாட்டம்

 

மயிலாடுதுறை: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் முறப்பநாடு விஏஓ கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து மயிலாடுதுறைகலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் முறப்பநாடு விஏஓ லூர்து பிரான்சிசை அவரது அலுவலகத்தில் சமூக விரோதிகள் சிலர் வெட்டி கொலை செய்த கண்டித்து நேற்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் மற்றும் தோழமை சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற மற்றும் தோழமை சங்கங்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சங்கீதா தலைமையில் 50க்கும் மேற்பட்ட விஏஓக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி விஏஓ கொலையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

The post மயிலாடுதுறையில் மெழுகுவர்த்தி ஏந்தி விஏஓக்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Mayiladuthurai Collector's Office ,Murappanadu VAO ,Srivaikundam ,Thoothukudi ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...