- திருகல்யாண உற்சவம்
- கோகிலம்பல் சமேதா
- உத்வாகநாதர்
- சுவாமி கோயில்
- வித்தியநாச்சேரி
- கூத்தலம்
- திருகல்யாண உற்சவம்
- உடுவாகுநாத சுவாமி கோயில்
- கூத்தலம், மயிலாடுதுறை மாவட்டம். ...
- கோகிலம்பல் சமேத உத்வகநாத சுவாமி கோயில்
குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே திருமணஞ்சேரி கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கடந்த 25-ஆம் தேதி அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, சுவாமி படி இறங்குதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி பின்னர் கல்யாணசுந்தரர் சுவாமிக்கு மங்கள ஸ்நானம் செய்யப்பட்டு, உற்சவ தினமான நேற்று கல்யாணசுந்தரர் காசி யாத்திரைக்கு திருஎதிர்கொள்பாடி எழுந்தருளல், மாலை மாற்றுதல், ஊஞ்சல் வைபவம் ஆகியவை நடந்தது. அதனை தொடர்ந்து கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி திருமணக்கோணத்தில் மணவறையில் எழுந்தருளி, பக்தர்கள் சீர்வரிசை எடுத்தவர, கோயில் தலைமை அர்ச்சகர் உமாபதி சிவாச்சாரியார் திருக்கல்யாண வைபவத்தை நடத்தி வைத்தார்.
திருக்கல்யாணத்தை முன்னிட்டு மூலவர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவிலின் திருக்கல்யாண ஏற்பாடுகளை செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், தக்கார் முத்துராமன், கணக்கர் ராஜகோபால் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இவ்விழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சாமிநாதன், ஒன்றியக் குழு தலைவர் மகேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதாராணி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இரவு பஞ்சமூர்த்திகள் புஷ்ப பல்லக்கில் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வருகின்ற மே 1ம் தேதி விடையாற்றியுடன் உற்சவம் நிறைவு பெறுகிறது.
The post குத்தாலம் அருகே திருமணஞ்சேரியில் கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி் கோயிலில் திருக்கல்யாண உற்சவம் appeared first on Dinakaran.