×

பெரியாண்டங்கோயில் பகுதி சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்

 

கரூர்: கரூர் பெரியார் வளைவு அருகே பெரியாண்டங்கோயில் பகுதிச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோயில் பகுதியில் இருந்து மதுரை பைபாஸ் சாலை இணையும் இடத்தில், பெரியார் வளைவில் இருந்து பெரியாண்டாங்கோயில், விஸ்வநாதபுரி, சின்னதாராபுரம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கான சாலை செல்கிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னாண்டாங்கோயில்,கருர் போன்ற பகுதிகளில் இருந்து மதுரை பைபாஸ் சாலை, பெரியாண்டாங்கோயில் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகிறது.

இந்நிலையில், பெரியாண்டாங்கோயில் நுழைவு சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த பகுதிச் சாலையை வாகன ஓட்டிகளின் நலன் கருதி சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டு வருகிறது. எனவே, அனைவரின் நலன் கருதி பெரியாண்டாங்கோயில் சாலையை சீரமைத்து தர வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியை பார்வையிட்டு சாலையை சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post பெரியாண்டங்கோயில் பகுதி சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Periandangoil ,Karur ,Karur Periyar Bend ,Dinakaran ,
× RELATED செங்குந்தபுரம் செல்லும் சாலையில்...