×

ஆர்ப்பாட்டம்

 

சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சாதி ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கபூபதி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் வேணுகோபால் முன்னிலை வகித்தார். மாநிலத்லைவர் செல்லக்கண்ணு சிறப்புரையாற்றினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகிகள் வீரையா, செல்வராஜ், திருநாவுக்கரசு, கிருஷ்ணமூர்த்தி, பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் பொன்னுச்சாமி, சுரேஷ், சேதுராமன், மோகன், சாந்தி, தென்னரசு, மதி, ஜெயராமன், சண்முகப்பிரியா, இளையராஜ் உள்ளிட்ட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

The post ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Palace ,Tamil Nadu Abolition of Untouchability Front ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...