- திண்டிகுல் 26ம்
- வார்டு
- கமிஷனர் ஆய்வு
- திண்டுக்கல்
- 26வது வார்டு KMS தெரு
- திண்டுக்கல் கார்ப்பரேஷன்
- 26வது
- தின மலர்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு கே.எம்.எஸ் தெருவில் பல ஆண்டுகளாக சிறிய மழை பெய்தாலும் சாலையில் குளம் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்கும். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் அப்பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நின்றது.
இதுகுறித்து புதிதாக பொறுப்பேற்ற கமிஷனர் மகேஸ்வரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது இதையடுத்து கமிஷனர், அப்பகுதிக்கு சென்று கழிவுநீர் தேங்கி நிற்கும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் கமிஷனர், கழிவுநீரை உடனடியாக அகற்றுவதுடன், தொடர்ந்து கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார். ஆய்வின்போது கவுன்சிலர் முகமது இலியாஸ், மாநகராட்சி ஆய்வாளர் முருகையா உள்பட பலர் உடனிருந்தனர்.
The post திண்டுக்கல் 26வது வார்டில் கமிஷனர் ஆய்வு appeared first on Dinakaran.