×

சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் வீதியுலா

சங்கரன்கோவில், ஏப்.28: சங்கரன்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பிரமோற்சவ திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு சித்திரை திருவிழா கடந்த 25ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறுகிறது. அதன்படி சித்திரை திருவிழா 2ம் நாளான நேற்று முன்தினம் இரவு  கோமதி அம்பாள் சமேத  சங்கரலிங்க சுவாமி பிரியா விடை சுவாமி பூம்பல்லக்கில் வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post சங்கரன்கோவிலில் சித்திரை திருவிழா சுவாமி-அம்பாள் பூம்பல்லக்கில் வீதியுலா appeared first on Dinakaran.

Tags : Sitra Festival ,Sankarankoville ,Swami-Amphal Poomballak Vetiula ,Sankaranko ,Vedyula ,Swami-Ambalak ,Chitra Festival ,Sankarankoville Swami-Amphal Poomballakh Vetyula ,
× RELATED உலகப்புகழ் பெற்ற மதுரை...