×

காளை முட்டி 2 பேர் பலி

திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் ஸ்ரீமாணிக்கநாச்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை கண்டரமாணிக்கம் கண்மாய் மற்றும் வயல் பகுதிகளில் மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. 500க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வீரர்கள், பார்வையாளர்கள் என 77 பேர் மாடு முட்டியதில் காயமடைந்தனர். இவர்களில், மஞ்சுவிரட்டை காண வந்த காரைக்குடியைச் சேர்ந்த பாண்டி (32). மதுரையை சேர்ந்த முருகன் (55) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

The post காளை முட்டி 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Tiruputhur ,Sivagangai District ,Kandaramanikam ,Tiruputhur Srimanikanachi Amman temple ,
× RELATED அதிமுக நோட்டீசுடன் பணம் பட்டுவாடா: முதியவர் சிக்கினார்