×

பத்ரிநாத் கோயில் திறப்பு மோடிக்காக முதல் பூஜை

பத்ரிநாத்: பத்ரிநாத் கோயில் நேற்று திறக்கப்பட்டது. முதல் பூஜை பிரதமர் மோடியின் நலனுக்காக நடந்தது. இமயமலையில் உள்ள பத்ரிநாத் கோயில் இந்த ஆண்டு தரிசனத்திற்காக நேற்று முதல்முறையாக திறக்கப்பட்டது. காலை 7.10 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. அங்கு முதல் பூஜை பிரதமர் மோடியின் நலனுக்காக நடந்தது. இந்த பூஜையின் போது கோயில் 15 குவிண்டால் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் முதல்நாள் பூஜை என்பதால் ஹெலிகாப்டர்கள் மூலம் பூக்கள் தூவப்பட்டன. ஏற்கனவே உத்தரகாண்ட்டில் உள்ள கங்கோத்ரி மற்றும் யமுனோத்திரி கோயில்கள் ஏப்.22ம் தேதியும், கேதர்நாத் கோயில் 25ம் தேதி திறக்கப்பட்டன.

The post பத்ரிநாத் கோயில் திறப்பு மோடிக்காக முதல் பூஜை appeared first on Dinakaran.

Tags : Badrinath ,Temple ,Modi ,Badrinath temple ,Himalayas ,
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்