×

2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை

கலவை: ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அடுத்த மேலபுலம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (38). இவரது மனைவி நெமிலி அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பேபி (எ) ரேணுகா (30). இருவருக்கும், கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களது மகள்கள் ஸ்ருதிகா (5), தீபக் (3). இருவரும் அதே பகுதியில் உள்ள அங்கன்வாடியில் படித்து வந்தனர். சங்கர் சென்னையில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வருகிறார். மனைவி ரேணுகா தனது 2 குழந்தைகளுடன் மேலபுலம் கிராமத்தில் மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் 12.30 மணியளவில் ரேணுகா, அங்கன்வாடியில் இருந்து குழந்தைகளை அழைத்து வர செல்வதாக வீட்டில் இருந்த மாமியாரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இந்நிலையில், நேற்று மதியம் 3.30 மணியளவில் அதே பகுதியில் ஏரிக்கரை அருகே உள்ள கிணற்றில் ரேணுகா மற்றும் அவரது 2 குழந்தைகள் சடல மாக கிடந்தனர். தகவலறிந்து வந்த கலவை போலீசார் ரேணுகா மற்றும் 2 குழந்தைகளின் சடலங்களை மீட்டு விசாரிக்கின்றனர்.

The post 2 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Shankar ,Melapulam ,Ranipet district ,Nemili ,Kutthambakkam ,
× RELATED ரூ.4 கோடி சிக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு...