×

சட்டப்பேரவையில் அரசு வெளியிட்ட விளையாட்டுத்துறைக்கான 31 அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் உதயநிதி உறுதி

சென்னை: ‘சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட 31 அறிவிப்புகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்’ என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தில் பங்கேற்க நேற்று முன்தினம் இரவு தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் வந்தார். நேற்று காலை, விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியிலுள்ள நகராட்சித் தொடக்கப்பள்ளி, மருத்துவமனை வீதி நகராட்சித் தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுவதை பார்வையிட்டு, அவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

பின்னர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ‘விழுப்புரம் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுகிறதா, உணவு தரமாக இருக்கிறதா, உரிய நேரத்தில் உணவு வழங்கப்படுகிறதா, புகார் ஏதும் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்தேன். இரு பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. பேரூராட்சிப் பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்துவது குறித்து முதல்வர் கண்டிப்பாக அறிவிப்பு வெளியிடுவார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில், சட்டப்பேரவையில் 31 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இந்த அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்’ என்றார்.

The post சட்டப்பேரவையில் அரசு வெளியிட்ட விளையாட்டுத்துறைக்கான 31 அறிவிப்புகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்: அமைச்சர் உதயநிதி உறுதி appeared first on Dinakaran.

Tags : Legislative Assembly ,Minister ,Udayanidhi ,Chennai ,Udayanidhi Stalin ,Dinakaran ,
× RELATED நாடாளும‌ன்ற தேர்தல் முடிவுகள்...