×

தமிழ்நாட்டில் 8,366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை மீட்டெடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாட்டில் 8,366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்ட சமூக வலைத்தள பதிவு: தமிழ்நாட்டில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 6,957 நீர்நிலைகளில் 8,366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு நடத்திய நீர்நிலைகள் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. பாதுகாக்கப்பட வேண்டிய நீர்நிலைகளில் கிட்டத்தட்ட 8%க்கும் கூடுதலானவை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை ஏற்க முடியாது.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நீர்நிலைகளில் 5 நீர்த்தேக்கங்கள், 1458 ஏரிகள், 3565 குளங்கள் அடங்கும். பாசன ஆதாரமாகவும், குடிநீர் ஆதாரமாகவும் திகழும் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அனுமதிக்கப்பட்டது பெரும் தவறு. ஆக்கிரமிப்பு அளவிடப்பட்ட 4933 நீர்நிலைகளில் 1328-ல் 75% வரையிலும், 1009ல் 75%க்கும் அதிகமாகவும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீர்நிலைகள் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுவிடும். நீர்நிலைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் தேவையை உயர் நீதிமன்றம் தொடங்கி ஐ.நா. அமைப்பு வரை வலியுறுத்தி வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 8,366 நீர்நிலைகள் ஆக்கிரமிப்பை மீட்டெடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Anbumani ,CHENNAI ,BAMA ,president ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...