×

எங்களின் கியாரண்டி பாஜக கொடுப்பது போன்றதல்ல: பிரதமர் மோடி பேச்சுக்கு டி.கே.சிவகுமார் பதிலடி

பெங்களுரு: காங்கிரஸ் கட்சியின் வாரண்டி எப்போதே காலாவதியாகி விட்ட நிலையில் அவர்களால் எப்படி மக்களுக்கு கியாரண்டி கொடுக்க முடியும் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி இருக்கிறார். கர்நாடக மாநில பாஜக நிர்வாகிகள் மத்தியில் பிரதமர் காணொளி வாயிலாக உரையாற்றினார். அப்போது பாஜக அரசின் சாதனைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர்; காங்கிரஸ் என்றால் ஊழலின் கியாரண்டி என்றும், எப்போதே காலாவதியாகிவிட்ட அவர்களால் எப்படி மக்களுக்கு கியாரண்டி கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமருக்கு பதில் அளிக்கும் வகையில் பேசியிருக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார்; நாங்கள் அளிக்கும் கியாரண்டி பாஜக அளிப்பது போன்று போலியானது கிடையாது என்று சாடியுள்ளார். தேர்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றத்ததால் கர்நாடகத்தில் டபுள் எஞ்சின் அரசு கடும் பின்னடைவை சந்தித்து இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று நிச்சயம் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றும் டி.கே.சிவகுமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

The post எங்களின் கியாரண்டி பாஜக கொடுப்பது போன்றதல்ல: பிரதமர் மோடி பேச்சுக்கு டி.கே.சிவகுமார் பதிலடி appeared first on Dinakaran.

Tags : Gyarandi ,Bajaka ,PM Modi ,D.A. ,K.K. Sivakamar ,Bengaluru ,Congress party ,Giyarandi ,T.S. ,K.K. Sivamar ,Dinakaran ,
× RELATED ரெமல் புயல் முன்னெச்சரிக்கை...