×

புதுக்கோட்டை வி.லெட்சுமிபுரம் கிராமத்தில் கல்குவாரி செயல்பட தடை: மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை

மதுரை: புதுகோட்டை மாவட்டம் வி.லெட்சுமிபுரம் கிரமத்தில் கல் குவாரி செயல்பட தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளையானது உத்தரவு பிறப்பித்துள்ளது. வி.லெட்சுமிபுரம் ஊராட்சிமன்ற தலைவர் ராமசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா வி.லெட்சுமிபுரம் கிராமத்தில் கல்குவாரி நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த பகுதியை சுற்றிலும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இவ்வாறு குடியிருப்புகள் அதிகமுள்ள பகுதியில் கல்குவாரி நடத்த அனுமதி வழங்க கூடாது என உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்கள், உத்தரவுகள் உள்ளதாகவும், அதனை மீறி கல்குவாரி நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும், மேலும் கல்குவாரி நடத்துபவர்கள் இந்த பகுதியில் சேலை கூடிய நீர்நிலை வாய்க்கால் பகுதிகளை ஆக்கிரமித்து, லாரி செல்லும் பாதையாக மாற்றியுள்ளதாக அந்த மனுவில் தெரிவித்திருந்தார் .

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்ட்டோரியா கெளரி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த போது இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், வட்டாட்சியரும் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். எந்த 2 அறிக்கையிலும் வேறுபாடு இருந்தது. மேலும் மாவட்ட ஆட்சியர் தக்கல் செய்த அறிக்கையில் தேதி குறிப்பிடாமல் இருந்ததால், மாவட்ட ஆட்சியர் நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மேலும் வழக்கறிஞர் ஆணையத்தை நியமித்து, வழக்கறிங்க ஆணையர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி அறிக்கை தக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில், நீதிமன்ற ஆணையம் சம்பந்தபட்ட குவாரியை ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்திருந்தார்.

இதனை ஒப்பிட்டு பார்த்த நீதிபதிகள் மாவட்ட ஆட்சியர் அறிக்கைக்கு, நீதிமன்ற அறிக்கைக்கு ஏராளமான முரண்பாடு உள்ளது. இது ஏற்க தக்கது அல்ல என கண்டனம் தெரிவித்தனர். இந்த வழக்கில் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதில் முரண்பாடுகள் இருந்தால் நீதிமன்றம் தானாக முன்வந்து மாவட்ட ஆட்சியர் மீதி நீதிமன்ற அவமதிப்பு வழங்கு எடுக்கும் என எச்சரித்து. தொடர்ந்து கல்குவாரி செயல்பட தடைவித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

The post புதுக்கோட்டை வி.லெட்சுமிபுரம் கிராமத்தில் கல்குவாரி செயல்பட தடை: மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற கிளை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pudukkottai ,Kalguari ,Letsumipuram ,High Court ,Madurai ,Pudugota District ,Lekhumipuram ,High Court Branch ,District Ruler ,
× RELATED காரியாபட்டி கல்குவாரி வெடிவிபத்து:...