×

மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

சேலம்:சேலம் மாவட்டம் மல்லூர் அருகேயுள்ள நிலவாரப்பட்டியை சேர்ந்தவர் சுருட்டையன் (எ) முருகன் (43). தொழிலாளி. இவரது மனைவி ராணி. 2021ம் ஆண்டு ஜூன் 7ம் தேதி ராணி வீட்டில் இல்லாதபோது, மது போதையில் சுருட்டையன் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது தனது 12 வயது மகளிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுருட்டையனை கைது செய்தனர். சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி ஜெயந்தி, நேற்று தீர்ப்பளித்தார். 12 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை சுருட்டையன்(எ) முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

The post மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை appeared first on Dinakaran.

Tags : Salem ,Surutaiyan (A) Murugan ,Nilavarapatti ,Mallur ,Salem district ,Rani ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை