×

2022-23ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே.8ம் தேதி முதல் மே.31ம் தேதி வரை நடைபெறும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

சென்னை : ஆசிரியர்களுக்கான பொது பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு வரும் மே 8ம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் கீழ் செயல்படும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் பணியிடங்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 -2023 கல்வியாண்டுக்கான பொது பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு மே 8ம் தேதி தொடங்கி மே 31ம் தேதி வரை நடைபெற உள்ளதாகவும் கலந்தாய்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பணிபுரியும் பள்ளிகளில் ஓராண்டு முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை தளர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்ப மாறுதல், மனமொத்த மாறுதல், நேரடி நியமனம், பதவி உயர்வு நிர்வாக மாறுதல், பணி நிரவல் என எந்த மாறுதல் வகை என்பதை ஆதாரத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. முன்னுரிமை பட்டியல் மற்றும் காலி பணியிட விவரங்கள் மே 3ம் தேதி வெளியிடப்பட உள்ளது. முன்னுரிமை பட்டியலில் திருத்தம் செய்வதற்கான கடைசி நாள் மே 4ம் தேதியாகும். இறுதி முன்னுரிமை பட்டியல் மே 5ம் தேதி வெளியிடப்படும் என்றும் மே 8ம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மே 20ம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post 2022-23ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே.8ம் தேதி முதல் மே.31ம் தேதி வரை நடைபெறும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : Education Year ,Chennai ,Schooling Department ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...