×

திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீன தலைமை மடத்தில் குருபூஜை

 

நாகப்பட்டினம்,ஏப்.27: திருமருகல் அருகே திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீன தலைமை மடத்தில் குருபூஜை வழிபாடு நடந்தது. திருமருகல் அருகே திருப்புகலூரில் வேளாக்குறிச்சி ஆதீன தலைமை மடம் அமைந்துள்ளது. இந்த மடத்திற்கு சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள் தலைமைவயில் சபாபதி தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு பூஜையும், 17வது குருமூர்த்திகள் வழிபாடும் நடந்தது. இதை தொடர்ந்து மகேஸ்வர பூஜை, அன்னதானம் ஆகியவை நடந்தது. இதில் தருமையாதீன மத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் ஓதுவார் காரியஸ்தர், திருவாவடுதுறை ஆதீனம் ஓதுவார், சூரியனார்கோயில் ஆதீன  காரியம்  வாமதேவ சுவாமிநாத சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். திருவாரூர் அன்பர் குமார் ஆதீன ஆத்மார்த்த மூர்த்தி  தியாகராஜ சுவாமிக்கு வெள்ளி பேழை வழங்கி ஆசிபெற்றும் தரிசனம் செய்தனர். மாலை  சபாபதி பூஜை திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலில் வழிபாடு சிவஞான கொலுக்காட்சி நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன், திருப்புகலூர், திருச்செங்காட்டங்குடி, திருமீயச்சூர் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றனர்.

The post திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீன தலைமை மடத்தில் குருபூஜை appeared first on Dinakaran.

Tags : Gurupuja ,Tirupugalur ,Velakurichi Atheena Chief Math ,Nagapattinam ,Tirupugalur Velakurichi ,Atheena Chief ,Math ,Tirumarukal ,Thirumarukal ,
× RELATED டிஏபி கரைசல் தெளித்து பருத்தி சாகுபடி...